அபிஷேகப் பொருள்களும், அவற்றின் பலன்களும் - Anmeegam tamil 2


கடவுளுக்கு நாம் எந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோமோ, அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். அபிஷேக படைப்புப் பொருட்களும் பலன்களும் வருமாறு:–

பழவகைகள் – ஜனவசியம்.
பஞ்சாமிர்தம் – வெற்றி, நீண்ட ஆயுள்.
பால் – ஆயுள் விருத்தி.
தயிர் – திடகாத்திரம்.
தேன் – குரல் வளமை.
நெய் – சுகவாழ்வு, மோட்சம்.
கரும்பு, சர்க்கரை – பகைவரை அழிக்கும்.
இளநீர் – நன்மக்கட்பேறு, போகம்.
விபூதி – ஞானம்.
சந்தனம் – சொர்க்க போகம்.
பன்னீர் – புகழ்.
வஸ்திரம் – வெகுமதி.
புஷ்பம் – சந்தோஷம்.
கற்பூரம் – அத்வைத முத்தி.
குங்குமம் – மங்கலம்.
மாப்பொடி – கடனை தீர்க்கும்.

இறைவனுக்கு நாம் அபிஷேகங்கள் செய்வதன் மூலம் எல்லா செல்வங்களும் பெற்று வளமான வாழ்வு வாழலாம். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை நாம் பார்ப்பதனால் நம் வாழ்வில் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்.